2025 ஜூலை 09, புதன்கிழமை

விளையாட்டு உபகரணங்கள் வழங்க நடவடிக்கை

Kogilavani   / 2014 நவம்பர் 13 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

 'இளம் தலைவர்கள் கௌரவிப்பும் விளையாட்டுக்கழகங்களுககு; விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை(14) பிற்பகல் 4.00 மணிக்கு சாய்ந்தமருது வொலிவேரியன் பல்தேவை கட்டட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் இவை வழங்கப்படவுள்ளன.

சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம்,  விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.ஜஹான் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் டி.எம்.சிசிர குமார,  சாய்ந்தருது பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஏ.ஏ.அஸ்வத் அலி, விளையாட்டு உத்தியோகத்தர் எம்.பீ.எம்.ரஜாய் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள ஆறு விளையாட்டுக் கழகங்கள் மற்றும் 22 இளைஞர்கள் கழகங்கள் என்பவற்றுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதுடன் 32 நாளைய இளம் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸினால் கௌரவிக்கப்படவுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .