2025 நவம்பர் 19, புதன்கிழமை

பாலமுனை அல்-அறபா விளையாட்டுக்கழகம் சம்பியன்

Thipaan   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான எல்லே  சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில்,   பாலமுனை அல்-அறபா விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற இறுதிப்போட்டியில், ரைஸ்டார் விளையாட்டுக் கழகமும் அல்-அறபா விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.

மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இவ் இறுதிப்போட்டியில் இரண்டு கழகங்களும் சமமான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டன.

மேலதிக நேரத்தில் 1 புள்ளியினால் அல்-அறபா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.

இப்போட்டிகள் விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றஸீன் தலைமையில் இடம்பெற்றன.

அல்-அறபா  விளையாட்டுக் கழகம் மாவட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X