Thipaan / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்
அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் ஓர் அங்கமான எல்லே சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில், பாலமுனை அல்-அறபா விளையாட்டுக்கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (04) நடைபெற்ற இறுதிப்போட்டியில், ரைஸ்டார் விளையாட்டுக் கழகமும் அல்-அறபா விளையாட்டுக் கழகமும் மோதிக் கொண்டன.
மிக விறுவிறுப்பாக நடைபெற்ற இவ் இறுதிப்போட்டியில் இரண்டு கழகங்களும் சமமான புள்ளிகளைப் பெற்றுக் கொண்டன.
மேலதிக நேரத்தில் 1 புள்ளியினால் அல்-அறபா விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றது.
இப்போட்டிகள் விளையாட்டு உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.றஸீன் தலைமையில் இடம்பெற்றன.
அல்-அறபா விளையாட்டுக் கழகம் மாவட்டப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


14 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago