Kogilavani / 2015 மே 05 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை ஈஸ்டன் ஈகிள்ஸ் விளையாட்டுக்கழக தலைவர் கிண்ணத்துக்கான, அணிக்கு எழுவர் கொண்ட கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் சென்.அன்ரனீஸ் கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.
ஏகாம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், 30 அணிகள் பங்கு பற்றின.
இறுதிப்போட்டியில் திருகோணமலை சென் அன்ரனீஸ் கழகத்தை எதிர்த்து ஜமாலியா பிஸ்ஷர்மன் விளையாட்டுக்கழகம் மோதியது.
இதில் சென்.அன்ரனீஸ் கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாகீர் கலந்துகொண்டு வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார்.
வெற்றிபெற்ற கழகத்துக்கு வெற்றிக் கிண்ணத்துடன் 25,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.




8 minute ago
28 minute ago
43 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
28 minute ago
43 minute ago
51 minute ago