Thipaan / 2015 ஜூன் 24 , பி.ப. 01:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் சம்பியனாகியது.
2015ஆம் ஆண்டுக்கான அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி ஜூன் மாதம் 18, 19, 20, 21ஆம் திகதிகளில் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது.
இச்சுற்றுப்போட்டியில் 10 பல்கலைக்கழகங்கள் பங்குபற்றின. முதலிடத்தை ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் பெற்றுக்கொண்டது.
களனி பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .