2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஆண்கள் வலைப்பந்தாட்டத்தில் நல்லூர் பிரதேச அணி சம்பியன்

Kogilavani   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ்ப்பாண மாவட்ட பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற அணிகளுக்கிடையே நடைபெற்ற ஆண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் நல்லூர் பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற அணி மாவட்டச் சம்பியனாகியது.

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி வலைப்பந்தாட்ட திடலில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற இறுதிப்போட்டியில் உடுவில் பிரதேச இளைஞர் சேவை மன்ற அணியும் நல்லூர் பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற அணியும் மோதிக்கொண்டன.

இரண்டு பாதிகளைக் கொண்ட இந்தப் போட்டியில், நல்லூர் அணி முதற்பாதியை 08:02 என்ற புள்ளிகள் அடிப்படையிலும், இரண்டாவது பாதியை 07:02 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் வென்று, சம்பியனாகியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .