Shanmugan Murugavel / 2022 ஒக்டோபர் 11 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சகா

அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதி பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இணைந்த கரங்கள் அமைப்பின் அனுசரனையின் ஊடாக ஜொலி ஸ்டார் கழக உறுப்பினர்களுக்கு பெறுமதி வாய்ந்த பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ருங்காபி சிட்னியில் முத்துக்கறி உணவக உரிமையாளர்.சமூக சேவையாளர் லக்சனின் ஏற்பாட்டில் இவை வழங்கப்பட்டன. இதன் போது இணைந்த கரங்களின் இணைப்பாளர்களான லோ.கஜரூபன், சங்கீத்,தஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய இணைப்பாளர் லோ. கஜரூபன், “எதிர்காலத்தில் விளையாட்டுக்கள் ஊடாக இனங்களுக்கிடையிலான பிணைப்புகள் வளர வேண்டும். பக்குவம் நம்பிக்கை என்பன கட்டியெழுப்பப்படுவதன் ஊடாக போதையற்ற உலகை விளையாட்டு வீரர்களால் உருவாக்க முடியும்” எனக் குறிப்பிட்டார்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026