Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
- ஹஸ்பர் ஏ. எச்

திருகோணமலை ஜின்னா விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மறைந்த தமது கழக வீரர்களை நினைவுபடுத்தும் முகமான கால்பந்தாட்டத் தொடரில் ஜமாலியா விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
ஜின்னா நகர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற 30 அணிகள் பங்கேற்ற இத்தொடரின் இறுதிப் போட்டியில் றிங்கோ ஸ்டார் கழகத்தை பெனால்டியில் வென்றே ஜமாலியா சம்பியனானது.
இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் எவ்வித கோல்களும் பெறாத நிலையில் சமநிலையில் முடிந்து பின்னர் பெனால்டியில் 7-6 என்ற ரீதியிலேயே ஜமாலியா வென்றது.
இத்தொடரின் சிறந்த கோல்காப்பாளராக என். நப்ரீஸ் தெரிவு செய்யப்பட்டார் என ஜமாலியா விளையாட்டுக் கழகத்தின் பொருளாளர் மு.மு. முஹமட் முக்தார் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago