R.Tharaniya / 2025 ஜூன் 22 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் பங்கு பற்றிய பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலய மாணவர்கள் வரலாற்றுச் சாதனை நிலை நடத்தியுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.எல்.நிஜாம்தீன் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த போட்டியில் 14 வயது பிரிவில் கலந்துக்கொண்ட மாணவன் எம்.என். நசீம் 60 மீற்றர் ஓட்டம்மற்றும் 80 மீற்றர் தடை தாண்டல் போட்டிகளில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக ஏழு முதலாம் இடமும் ஐந்து நிகழ்ச்சிகளில் இரண்டாம் இடமும் பெற்று12 நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மாகாணமட்டப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், குழுநிகழ்ச்சியில் 18 வயதுக்குட்பட்ட உதைப்பந்தாட்ட அணியும் மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் சாதனை படைக்க ஒத்துழைப்புக்களை வழங்கிய பாடசாலை பிரதி அதிபர்ஏ.எல்.அன்ஸார், ஆசிரியர் எச்.எம்.பஹாஸ்தீன், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் ஏ.ஏ.எம்.இர்பான் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் அதிபர் நன்றிகளை தெரிவித்துள்ளார்.


எச்.எம்.எம்.பர்ஸான்
9 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
3 hours ago