Kogilavani / 2015 நவம்பர் 27 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
அட்டாளைச்சேனை பிரதேச சுப்பர் சொனிக் காலை வட்ட அணியினருக்கும், புளு இலவன் காலைவட்ட அணியினருக்கும் இடையிலான சவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் புளு இலவன் காலைவட்ட அணியினர் நேற்று வெற்றிபெற்றனர்.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலை விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை(25) இடம்பெற்ற இப்போட்டி 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக அமைந்தது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புளு இலவன் காலைவட்ட அணியினர் சுப்பர் சொனிக் காலைவட்ட அணியினரை முதலில் துடுப்பெடுத்தாடும்மாறு பணித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சுப்பர் சொனிக் அணியினர் 15 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை பெற்றனர்.
இந்த வெற்றி இலக்கை வைத்து புளு இலவன் காலைவட்ட அணியினர் துடுப்பெடுத்தாடி 9.3 ஓவரில் வெற்றியை தனதாக்கிக்கொண்டனர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக எம்.பஸ்மீர் ஆசிரியர் தெரிவு செய்பட்டார். அவர் சுமார் 45 பந்துகளை எதிர்கொண்டு 100 ஓட்டங்களை புளு இலவன் காலைவட்ட அணியினருக்கு பெற்றுக்கொடுத்து தனது அணியின் பெற்றிக்கு பாரிய பங்களிப்பைச் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .