Shanmugan Murugavel / 2025 பெப்ரவரி 17 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் கால்பந்தாட்டக் கழகத்தின் ஏற்பாட்டில், லெஜன்ட்ஸ் கழகத்தின் பூரண அனுசரனையில் தற்போது நடைபெற்று வருகின்றன விலகல் முறையிலான கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த இறுதிப் போட்டியைத் தொடர்ந்து தொடரில் பங்கேற்ற 12 அணிகளுக்கும் இடையே பெனால்டத் தொடர் ஒன்று நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விலகல் முறையிலான தொடரின் அதே ஆட்ட நிரலுக்கு ஏற்ப இத்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதலாம், இரண்டாம் இடங்களை பெறும் அணிகளுக்கு கிண்ணங்கள் வழங்கப்பட உள்ளன.
அதே போல இந்த விலகல் முறை தொடரில் பங்கேற்ற 12 அணிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஒரு வீரர் தெரிவு செய்யப்பட்டு அவருக்கான கிண்ணமும் வழங்கப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .