2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

மூன்றாமிடம் பெற்ற மட்டு வின்சன்ட் மாணவி அனந்தினி

Shanmugan Murugavel   / 2024 ஒக்டோபர் 07 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மட்டத்தில் இரத்தினபுரியில் அண்மையில் நடைபெற்ற ஆகக்கூடிய எடையான (73 கிலோ கிராமுக்கு மேல் ) 18 -20 வயதுப் பிரிவின் கீழ்  கராத்தே தைக்குவாண்டோ எனும்  காலால் மட்டும் தாக்கும் விளையாட்டில்  மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் பாடசாலையின் மாணவி சரவணன் அனந்தினி இந்த போட்டியில் பாடசாலை வரலாற்றில்  முதல் தடவை பங்குபற்றி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.

அனந்தினி, மட்டக்களப்பு எஸ்.கே.ஓ. கராத்தே கழகத்தைச் சேர்ந்த பயிற்றுவிப்பாளர்களான கே.ரி.  பிரகாஸ், க.குகதாசன், வி. விமல்ராஜ், கணேசலிங்கம் ஆகியோரின் மாணவியான இவரை பாடசாலை சமூகம் செவ்வாய்க்கிழமை (01) நினைவுக் கேடயம் வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .