2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கம்பஹாவின் சில பகுதிகளில் நாளை நீர் வெட்டு

S.Renuka   / 2025 ஜூலை 06 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பாஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை திங்கட்கிழமை (07)  12 மணி நேர நீர் வெட்டு விதிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, பேலியகொட, வத்தளை, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க-சீதுவ நகர சபைப் பகுதிகள் மற்றும் களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபைப் பகுதிகளுக்கு காலை 08.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

சபுகஸ்கந்த மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக நீர் விநியோகம் தடைப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .