Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Mayu / 2023 டிசெம்பர் 20 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் திணைக்களத்திற்கு அருகில் மக்களிடம் பலவித அழுத்தங்களை பிரயோகித்து பணம் வசூல் செய்த 11 பேர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஜனக பிரியதர்சன விதானகேவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் எனவும், அவர்கள் போதை பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பணம் தேடும் நோக்கில் குறித்த இடத்தில் தங்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாரஹேன்பிட்டிக்கு வெளியில் உள்ள மனீன் நகரை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
31 minute ago
51 minute ago
1 hours ago