Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஜூலை 13 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் (PUCSL) ஜூலை - டிசம்பர் காலப்பகுதிக்கான மின்சாரக்கட்டணத்தில் அண்மையில் செய்யப்பட்ட திருத்தங்களை கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் (JAAF) வரவேற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மற்றும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டணத்திருத்தங்கள் தொழிற்துறை சமர்ப்பிப்புகள் போன்ற விடயங்களை கவனத்தில் கொள்ளாமல், நெரிசல் இல்லாத (Off-peak) நேரங்களில் தொழிற்துறை மின்சாரக்கட்டணங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
இதனால் செயற்பாட்டுச்செலவுகள் முக்கியமாக அதிகரித்ததால், நெரிசல் இல்லாத (Off-peak) நேரங்களில் வேலையின்மை பிரச்சினைக்கான அவதானம் காணப்பட்டது. மேலும் இந்தகால கட்டத்தில் ஆடைத்தொழிலின் போட்டி மற்றும் ஒட்டு மொத்த நிலைத்தன்மைக்கும் பிரச்சினையாக அமைந்தது.
2022 இல், Off-peak விகிதம் ரூபாய் 6.58/ kWh இலிருந்து ரூபாய் 15/ kWh ஆக அதிகரித்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், Off-peak ரூபாய் 15 இலிருந்து ரூபாய் 34/kWh இன் கணிசமான அதிகரிப்புடன் ஆரம்பிக்கப்பட்டது, இதன் விளைவாக வெறும் 12 மாதங்களில் 400% மின்கட்டணவிகிதங்கள் அதிகரிக்கப்பட்டன .கடந்த வாரம் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு (PUCSL) JAAF இனால் முன்னிலைப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில், இலங்கையானது பிராந்தியத்தில் அதிக தொழிற்துறைக்கட்டண விகிதங்களைக்கொண்டதாக காணப்பட்டது.
இது பிராந்தியத்தில் தொழில் துறையின் போட்டித்தன்மைக்கும், நாட்டின் பொருளாதாரம் அந்நிய செலாவணிக்கான அதிக தேவைப்பாடும் இந்த நேரத்தில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் திறனுக்கும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. எனவே, Off-peak நேரங்களில் தொழில்துறை மின்சாரக்கட்டணம் உட்பட தொழில்துறைகட்டணத்தை 29/kWh ஆகக்குறைப்பதற்கான மின்சார ஒழுங்கு முறையாளர்களின் இந்த முடிவை தொழில்துறை பெரிதும் பாராட்டுகிறது.
புதிய திருத்தங்கள் ஒட்டு மொத்த தொழில்துறை மின்கட்டண விகிதங்களை சுமார் 9% குறைத்துள்ளன. JAAF இந்த நடவடிக்கையை பாராட்டினாலும், உலகச்சந்தையின் பாதகமான நிலைமைகளின் காரணமாக, ஆடைத்துறையின் ஏற்றுமதி செயல்திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், அதிக தொழில்துறை மின்கட்டணக்குறைப்புகளை மின்சார ஒழுங்கு முறை நிறுவனம் பரிசீலிக்கும் என்று தொழில் துறையினர் நம்புகின்றனர்.
மே 2023 இல் ஆடை மற்றும் துணி ஏற்றுமதி வருமானம் 14.55% குறைந்துள்ளதால், தொழில் துறை மின்சாரக்கட்டண விகிதங்களைக்குறைப்பதன் மூலமும் தொழிற்துறையினர் மேலும் செயல்பாட்டுச்செலவுகளைக்குறைப்பதன் மூலமும் அனுகூலங்களை அடையமுடியும். கடந்த ஆண்டு முதல் மீண்டும் மீண்டும் மின்கட்டண உயர்வுகளுக்கு இடையே பாதிக்கப்பட்ட பகுதியில் தொழில்துறையின் போட்டித்தன்மையை மீட்டெடுப்பதில் இதுவும் ஒரு முக்கிய அங்கமாகும்.
தற்போதுள்ள முதலீடுகளைத்தக்கவைத்து, புதிய முதலீடுகளை ஈர்க்க வேண்டுமானால், இலங்கை தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு போட்டிக்கட்டணத்தை வழங்க வேண்டும். JAAF பல சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்தபடி, மின்சாரம் விநியோகிப்பாளரான இலங்கை மின்சாரசபை (CEB) பாரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயல்படுத்துவதை அவசரமாக அளவிட வேண்டும், 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் 70% எரி சக்தியை புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அரசாங்கத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பிந்தையது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தனியார்துறை முதலீட்டிற்கு ஊக்கியாக இருக்கும், இது CEB உற்பத்தியில் இருந்து சுயாதீனமான மின்சாரத்தேவைகளை பபாதுகாக்க தனியார் மின்சார உற்பத்தி நிறுவனங்களுடன் தொழிற்துறைகளை அனுமதிக்கிறது. இது, CEB மீதான சுமையைக் குறைக்கும், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களானது (SOE) நுகர்வோர் விலைகளைக்குறைக்கும் வகையில், அதிக உற்பத்திச்செலவுகளை குறைக்கவும், அதிகரித்த போட்டியின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் முன்னுதாரணமாக அமைகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
9 hours ago