Kogilavani / 2015 ஜூலை 06 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

வே.தபேந்திரன்
வேதநாயகம் தபேந்திரனின் யாழ்ப்பாண நினைவுகள்- பாகம் 1 நூலின் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை (05) அளவெட்டி மகாஜனசபை மண்டபத்தில் நடைபெற்றது.
மகாஜன சபையின் தலைவரும் ஓய்வுநிலை விவசாயப் போதனாசிரியருமான வை.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அறிமுக உரையை யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் உதவிப் பதிவாளர் இ.சர்வேஸ்வரா நிகழ்த்தினார்.
நூல் நயப்புரைகளை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர் வ.வசந்தகுமார், சுழிபுரம் ஆறுமுக வித்தியாலய ஆசிரியர் கை.சரவணன் ஆகியோர் நிகழ்த்தினார்.
ஏற்புரையை நூலாசிரியர் வேதநாயகம் தபேந்திரன் நிகழ்த்தினார். இந்த நிகழ்வில் கலைஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

5 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
25 Apr 2026