Sudharshini / 2015 டிசெம்பர் 17 , மு.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்,பி.எம்.எம்.ஏ.காதர்
மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கமும் கனடா படைப்பாளிகள் உலகமும் இலங்கை தடாகம் கலை இலக்கிய வட்டமும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இலக்கிய சந்திப்புடனான விருது வழங்கும் நிகழ்வு, திருகோணமலை சன்சினே மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது.
இந்நிகழ்வில், மருதமுனையைச் சேர்ந்த இலக்கிய மதிப்பீட்டாளரும் ஆசிரியரும் ஊடகவியலாளருமான ஜெஸ்மி எம்.மூஸா, சிறந்த இளம் இலக்கிய விமர்சகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை, மலேசியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 42 எழுத்திலக்கியவாதிகள் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, விவசாய அமைச்சர் துரைராஜ சிங்கம், மலேசியா மற்றும் கனடா எழுத்தாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



9 minute ago
9 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
9 hours ago
09 Feb 2026