2024 மே 16, வியாழக்கிழமை

கரோல் பாடல் போட்டி

Sudharshini   / 2015 டிசெம்பர் 19 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறை மாவட்ட சமூகத்தொடர்பு 'கலையருவி' அருட்பணி மையத்தின் ஏற்பாட்டில், மன்னார் மறை மாவட்டப் பங்குகளுக்கிடையில் நடாத்தப்பட்ட புனித செசிலியா விருதுக்கான மாபெரும் கரோல் பாடல் போட்டியின் இறுதிப் போட்டியும் விருது  வழங்கும் நிகழ்வும்   மன்னார் நகர மண்டபத்தில் இன்று (19) நடைபெற்றது.

கலையருவி அமைப்பின் இயக்குநர் அருட் திரு. தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு, மன்னார் மறை மாவட்டக் குரு முதல்வர் அருட்திரு. ஏ. விக்ரர் சோசை அடிகளார் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு. எஸ். மாக்கள், டிலாசால் ஆங்கில மொழிப் பாடசாலை அதிபர் அருட் சகோதரர் கே. எஸ். யோகநாதன், லூயி முன்பள்ளி அதிபர் அருட்சகோதரி றீற்றா குணநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 கடந்த 12ஆம் திகதி புனித செபஸ்தியார் பேராலய வளாகத்தில் நான்கு பிரிவுகளாக நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் பல்வேறு பங்குகளைச் சார்ந்த 38  குழுக்கள் பங்கேற்றிருந்தன.

ஒவ்வொரு பிரிவிலிருந்தும் நான்கு குழுக்கள் வீதம் 16 குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டு இறுதிப் போட்டியில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறும் குழுக்களுக்கு புனித செசிலியா விருது வழங்கப்படும்.

மன்னார் மாவட்டத்தில் வருடாந்தம் நடைபெறும் பிரமாண்டமான கரோல் பாடல் போட்டியாக இப்போட்டி அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .