Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}










விஷான்
இலங்கைக் கம்பன் கழகம் நடத்தும் “நிருத்தோற்சவம்” ஆடல் வேள்வி, வெள்ளவத்தையிலுள்ள இராமகிருஷ்ண மண்டபத்தில், வெள்ளிக்கிழமை (27) நடைபெற்றது.
சைவமங்கையர் வித்யாலய நடன ஆசிரியர் பரதகலா வித்தகர் ஷாலினி வாகீஸ்வரன் நெறியாள்கையிலும் நட்டுவாங்கத்திலும் நடைபெற்ற இந்நிகழ்வில், “சீதாபகரணம்” எனும் நாட்டிய நாடகம் அரங்கேற்றப்பட்டது.
குறித்த நாட்டிய நாடகம், அகில இலங்கைத் தமிழ்த்தினப் போட்டிகளில் கோட்ட, வலய, மாகாண மட்டங்களில் முதலிடம்பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டிய நாடகம் "சீதாபகரணம்" கம்பவாரிதி ஐயாவின் ஏழுத்துருவாக்கத்தில் அமையப் பெற்றது. இந்நிகழ்வுக்கு அதே பாடசாலை பாடல் ஆசிரியர் தாரணி ராஜ்குமார் இசையமைத்துப் பாடியுள்ளார்.
5 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
09 Mar 2026