2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கௌரவிப்பு

Sudharshini   / 2015 ஜனவரி 03 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் வாழ்நாள் சாதனையாளர் மற்றும் கலாபூசணம் விருது பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (03) வவுனியா சிந்தாமணி ஆலயம், அந்தணர் ஒன்றிய குருகுல கட்டடத்தில் நடைபெற்றது.

 அந்தணர் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாத குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா பிரதேச சபை செயலாளர் கா. உதயராசா வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில், வாழ்நாள் சாதனையாளர் விருதினை, சமஸ்கிருத பண்டிதர் சிவஸ்ரீ கிருஸ்ணசாமி குருக்கள், சதாசிவ குருக்கள் ஆகியோரும் கலாபூசணம் க. கந்தசாமி குருக்கள், கலாபூசணம் ப. சிவானந்தசர்மா, கலாபூசணம் மு. பத்மநாத சர்மா, கலாபூசணம் திருமதி  ஞா. ஞானலச்சுமி, கலாபூசணம் செல்வி யோகலட்சுமி சோமசுந்தரம், கலாபூசணம் திருமதி புவனநாயகி ஐயம்பிள்ளை, கலாபூசணம் மு. குமாரசாமி, கலாபூசணம் ஆ. பத்மநாதன், கலாபூசணம் ந. சுப்பிரமணியம், கலாபூசணம் . சுப்பிரமணியம் ஆகியோர் கலாபூசணம் விருது பெற்றமைக்காக கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், வவுனியா பிரதேச சபை செயலாளர், கலைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X