Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை
Gavitha / 2015 பெப்ரவரி 24 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
காடும், காடு சார்ந்த முல்லை மண்ணில் 'காட்டில் ஓர் கதை நூல்' வியாழக்கிழமை (19) வெளியிடப்பட்டுள்ளது.
வள்ளுவர்புரம் யோ.புரட்சியின் மாற்றங்காணும் அரங்குகள் வரிசையில் 'ஆஷா நாயும் அவளும்' எனும் இச்சிறுகதை நூல் வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள காட்டில் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வுக்கு கற்சிலைமடு பாடசாலை அதிபர் சி.நாகேந்திரராசா தலைமை தாங்கினார். நூலுக்கான நயவுரையியை கவிஞர் சமரபாகு சீனா உதயகுமார் வழங்கினார். முதற் பிரதியை கற்சிலைமடு பாடசாலை அதிபர் சி.நாகேந்திரராசா வழங்கி வைக்க வடமாகாண சபை உறுப்பினர் சி.சிவமோகன் பெற்றுக்கொண்டார்.
ஏற்கெனவே வள்ளுவர்புரத்தில் பாடசாலை மர நிழலில் 'இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்' எனும் கவிநூலையும் முல்லைத்தீவு கடற்பரப்பில் மிதக்கும் படகுகளில் 'எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்' எனும் கவிதை நூலினையும் வெளியிட்ட இக்கவிஞர் 'ஆஷா நாயும் அவளும்' எனும் இந்நூலினையும் பிரசவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
26 Apr 2024
26 Apr 2024
26 Apr 2024