2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யாவும் மாயைதானே – மனிதா

Thipaan   / 2015 ஜனவரி 17 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


பல்லவி


யாவும் மாயைதானே – மனிதா
யாவும் மாயைதானே
இன்பம் துன்பம் ஏனோ - இக
வாழ்வே கனவுதானே – மனிதா

சரணம்

1.    கரையேயில்லாத ஆசைக்கடலில்
    திரையேயில்லாத காட்சிகள்
    நிலையே இல்லாமல் போவதாலே        (யாவும்)

2.    தேசம் நேசம் யாவும் கனவாய்
    வாசம் செய்த உடலும் கனவாய்
    மாறி மறைந்து போவதாலே            (யாவும்)

3.    கானல் நீர் போல் காட்சி தரினும்
    தாகம் தீர வழியில்லாமல்
    காலம் வீணாய்க் கழிவதாலே        (யாவும்)

4.    புலனுக்கேட்ப புவியின் வாழ்வு
    சுழுத்திநிலையில் மறைவதாலே
    மறையும் உலகு மாயையே            (யாவும்)

-ஷெய்ஹூல் முப்லிஹீன் எம். எஸ் எம் அப்துல்லாஹ் (றஹ்)





 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .