Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

காதல் கவிதைப் பாட
ஆசைதான் எனக்கு ஆனாலும்
என் மலையக மகிமையை பாட
வாய் பலமுறை எத்தனிக்கின்றது
இன்று நிம்மதியை தேடி
மனிதன் அலைந்து அலைந்து
வெறுத்து நிற்கின்றான் அதற்காகதான்
சொல்கின்றேன் ஒருமுறை வந்து
இயற்கை எழில் கொஞ்சும்
மலைநாட்டை பாருங்கள் நிம்மதி
எங்கு இருக்கும் என்று உங்களுக்கு
நான் சொல்ல தேவையில்லை.
கண்ணுக்கு எட்டியத்தூரமெல்லாம்
பெரிய மலைகள் அருவிகள்
என்று ஒரு சொர்க்கத்தையே
இறைவன் இங்கு படைத்து விட்டான்
என்று எண்ண தோன்றுகின்றது
அதுமட்டுமா? மலர்களின் வாசனையும்
மண்ணின் வாசனையும் என்னுள்
வந்து ஏதேதோ செய்கின்றது.
உயிர் வாழ உணவு தேவை
அதிலும் சுவையான உணவு
கிடைத்தால் இதைவிட வேறென்ன
என்று எண்ணத்தோன்றும் அதற்காக
சரி இங்கு விளையும் உணவினை
ஒருமுறை உண்டுபாருங்கள் நீங்கள்
நினைக்கும் போதெல்லாம் நாவில்
உமிழ்நீர் சுரக்கும் இதைவிட நிம்மதியை
வேறு எங்கு தேட போகின்றீர்கள்
வரதராஜன் யுகந்தினி
29 minute ago
42 minute ago
44 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
42 minute ago
44 minute ago
1 hours ago