R.Tharaniya / 2025 மே 04 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுவாமி விபுலானந்த அடிகளாரின் 133 வது ஜனன தின நிகழ்வு சனிக்கிழமை(3) மட்டக்களப்பு கல்லடி-உப்போடை விபுலானந்தர் மணி மண்டப வளாகத்தில் உள்ள அடிகளாரின் சமாதியில் இடம் பெற்றது .
இராமகிருஷ்ண மிஷன் துறவியும் ,முத்தமிழ் வித்தகர்,சிவானந்தா வித்தியாலய ஸ்தாபகருமான சுவாமி விபுலானந்தரின் 133வது பிறந்த தினத்தை முன்னிட்டு கல்லடி-உப்போடை விபுலானந்த மணி மண்டபத்திலுள்ள அடிகளாரின் சமாதிக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் சுவாமி நீலமாதவானந்தாஜி மகராஜ் தலைமையில் இடம் பெற்றது .
இந்நிகழ்வில் விபுலானந்த பக்தர்கள் ,கல்விமான்கள் ,மாணவர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,விபுலானந்தர் சபையினர் கலந்து கொண்டு அன்னாரை நினைவுகூர்ந்து அவர் பாடிய பாடல்களை பாடியும் அன்னாரின் சமாதிக்கு மலர்மாலை அணிவித்து,அவரை வணங்கி வழிபட்டார்கள்.
க.விஜயரெத்தினம்





4 minute ago
9 minute ago
46 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
9 minute ago
46 minute ago
58 minute ago