2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆழ்கடலில் வைத்து திடீரென மாரடைப்பு

Freelancer   / 2021 டிசெம்பர் 28 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் , நேற்று துறைமுகத்திற்கு சடலம் கொண்டுவரப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

அசன்பாவா வீதி பிறைந்துறையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான படகு சாரதி (ஸ்கீப்பர்) எம்.ஐ.எம்.பாறுக் (வயது 47) என்பவரே  உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து  ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக படகில் உயிரிழந்துள்ள நிலையில் அவருடன் சென்றவர்களால் மீண்டும் மீன்பிடி துறைமுகத்திற்கு சடலமாக கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.

உயிரிழந்த மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், வாழைச்சேனை துறைமுகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X