2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆஸாத்நகர் மக்களுக்கு குடிநீர்

Freelancer   / 2021 நவம்பர் 21 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக், எம்.எஸ்.எம்.ஸாகிர் 

தோப்பூர் 58 ஆஸாத் நகர் மக்களின் நீண்ட கால குடிநீர் கோரிக்கைக்கு தீர்வு கிடைத்துள்ளது.

கிணறுகளின் மூலம் கிடைக்கும் குடிநீர் பாவனைக்கு உதவாத காரணமாக 58 ஆஸாத் நகர் மக்கள் குடிநீர் இன்மையால் மிக நீண்ட காலம் பல சொல்லொண்ணா இன்னல்களை எதிர் கொண்டு வந்தனர். 

இது தொடர்பாக  பிரதேச மக்கள் பல அரசியற் தலைமைகளிடமும் பல கோரிக்கைகள் முன்வைத்தும் தீர்வு கிடைக்கவில்லை.

இதனால் அப்பிரதேச மக்கள் நம்பிக்கையீனத்துடன் இருந்த வேளையிலேயே ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மகளிர் அமைப்பாளர் றைஷா மகறூப்பிடம் தங்களது பிரச்சினையை முன்வைத்தனர்.

மக்களின் பிரச்சினையை அறிந்த உடனேயே நடவடிக்கை மேற்கொண்ட மகளிர் அமைப்பாளர் றைஷா மகறூப், 58 ஆஸாத் நகர் மக்களுக்கான குடிநீர்த் தேவையை நிறைவு செய்து வைத்தார்.

58 ஆஸாத் நகர் மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்வதற்கான குழாய்கள் பொருத்தும் நடவடிக்கை நேற்று (20) இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X