2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சைக்கிள் ஓடுபாதை பெற்றுத்தர மேயர் உறுதி

Freelancer   / 2021 நவம்பர் 22 , பி.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்  

மட்டக்களப்பு நகரில் பாடசாலை நாட்களில் பயணம் செய்ய சைக்கிள்  ஓடுபாதை அமைத்துத் தரும் படி மாணவர்கள் விடுத்த கோரி தொடர்பில், உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி  ஏற்பாடுகளை முன்னெடுத்துத்  தருவதாக மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன், மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

இந்த ஓடு பாதையினை முதல் முறையாக  மாநகர பகுதியில் அமைத்து தருமாறு கோரி, சைக்கிளில் பாதுகாப்பான பயணம் ஒன்றினை மேற்கொண்ட மாணவர்கள், குறித்த வேண்டுகோளை மாநகர முதல்வரிடம் முன்வைத்தனர்.

அதன்போது, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம், போக்குவரத்து திணைக்களம் ஆகியோருடன் கலந்தாலோசித்து அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து  தருவதாக மாநகர முதல்வர் மாணவர்களிடம் உறுதியளித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X