Janu / 2023 ஜூன் 06 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா ஜாவா பள்ளிவாயலின் நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் பெயர் பலகை 2023.06.05 திறந்து வைக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முக்கிய பிரமுகரும் பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான முஸ்லிமின் ஹாஜியார் மஸாஹிரினால் இது திறந்து வைக்கப்பட்டது. 170, 000 ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட இந்த பெயர் பலகையை தனது தந்தையான முஸ்லிமின் ஹாஜியாரின் பெயரால் அன்பளிப்பு செய்துள்ளார்.
இந்த வைபவத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்,பள்ளிவாயல் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .