2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பொதி வைத்திருந்தவர் கைது

Ilango Bharathy   / 2022 ஜனவரி 02 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறபா நகர் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை நேற்று  (01)  மாலை பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் இதன் போது அந் நபரிடமிருந்து பொதிசெய்யப்பட்ட நிலையில்  130 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரை மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X