2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்கு சுஆதா தெரிவு

R.Tharaniya   / 2025 ஜூன் 01 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவி அகில இலங்கை தேசிய மட்ட விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவானார்.

காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையில் தரம் ஏழில் கல்வி கற்கும் ஏ.ஜே.சுஆதா  என்ற மாணவி அகில இலங்கை விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம் மாணவி பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டி,தமிழ்மொழிதினப் போட்டி,மீலாத் தின போட்டி உள்ளிட்ட பல வகையான இணைப்பாட விதானப்போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்று, சான்றிதழ்களையும்,பணப் பரிசுகளையும் தனதாக்கிக்கொண்டார்.

இவரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் கடந்த  வெள்ளிக்கிழமை (30) அன்று கல்லூரியின் அதிபர் யூ.எல்.மன்சூர் தலைமையில் பாராட்டுக்களும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது டன் 

மாணவியின் வெற்றிக்கு அயராது பாடுபட்ட ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர். என்பதை பாடசாலை சமூகம் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கல்லூரியின் அதிபர் தெரிவித்தார்.

க.விஜயரெத்தினம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .