A.P.Mathan / 2012 மார்ச் 27 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை தமிழர் பிரச்சினை தமிழக அரசியலில் முக்கிய திருப்பமாக அமைந்திருக்கிறது. ஐ.நா.சபையில் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் மீறல் குறித்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளை மனம் குளிர வைத்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராக ஏறக்குறைய நான்கு வருடங்களாக பேசி வந்த கட்சிகள் இப்போது வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளன. குறிப்பாக சென்ற நாடாளுமன்ற தேர்தல், மற்றும் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தல் போன்றவற்றில் மத்திய அரசையும், அதை வழிநடத்தும் காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமர்ச்சித்து வந்தார் முதல்வர் ஜெயலலிதா. இலங்கை தமிழர் பிரச்சினையில் காங்கிரஸுக்கு அக்கறை இல்லை என்பதையே அவரது அறிக்கைகளும், சட்டமன்ற பேச்சுகளும் எடுத்துக்காட்டின. தமிழக அரசியலில் இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் - தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை திணறவே வைத்தது.2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago