A.P.Mathan / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இருந்து 12 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்ற குழு, இலங்கை சென்று திரும்பியுள்ளது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள், இரு நாடுகளில் இருந்தும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர் குழுக்களிடம் இருந்தும் வரும் நாட்களில் எழும் என்று எதிர்பார்க்கலாம். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பெரும் திராவிட கட்சிகளும் கடைசி நிமிடத்தில், அந்த நாடாளுமன்ற குழுவில் இருந்து விலகியபிறகு, இரு அரசுகளின் இந்த முயற்சியே பிசுபிசுத்து போய்விடும் என்று எண்ணியவர்களும் உண்டு. அதுபோன்றே, ஜெனிவாவில், ஐ.நா. மனித உரிமை கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்த பிறகு. இந்தக் குழுவிற்கு அங்குள்ள 'சிங்கள-பௌத்த பேரினவாதிகள்' கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தவர்களும் உண்டு. ஆனால், அவர்கள் அனைவரது எதிர்பார்ப்புகளிலும் மண்ணைப்போட்டுவிட்டு, அந்த குழு வெற்றிகரமாக இந்தியா திரும்பியுள்ளது..jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .