Super User / 2012 ஜூலை 01 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் கட்டம் கட்டமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதன் நோக்கம் எல்லோருக்கும் தெரிந்ததே. இதற்கு முன்னர் நடந்ததைப் போலவே அரச அதிகாரங்களையும் அரச வளங்களையும் பாவித்து ஒரு கட்டத் தேர்தல்களை வெற்றி பெற்று அதனூடாக ஏற்படும் மானசீக தாக்கத்தை உபயோகித்து ஏனைய கட்டஙகளிலும் தேர்தல்களை மிக இலகுவில் வெற்றி பெறுவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கிறது.
தற்போது கலைக்கப்பட்டுள்ள மூன்று மாகாண சபைகளிலும் கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கே கூடுதலான கவனம் ஈர்க்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பற்றியே முழுக் கவனத்தையும் செலுத்துவார்கள்.
இதற்கும் ஐ.தே.க. தலைவர் பதிலளித்திருந்தார். இது வடக்கில் தேர்தலை நடத்தாமல் இருக்க அரசாங்கம் முன்வைக்கும் போலிக் காரணமென அவர் கூறினார். இப்போது வடக்கில் தேர்தல் நடத்த முடியாதென்றால் இரணடரை ஆண்டுகளுக்கு முன்னர், 2010 ஆம் ஆண்டு அரசாங்கம் வடக்கில் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் எவ்வாறு நடத்த முடிந்தது என்று அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அதனை நியாயமாக நடத்த வேண்டும் என்றும் அதனூடாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வட பகுதியில் அதிகாரத்திற்கு வரச் செய்வதன் மூலம் அவர்களது கோரிக்கைகளின் நடைமுறை சாத்தியமற்றத் தன்மையை அவர்களுக்கே புரிய வைக்க வேண்டும் என்றும் ஜாதிக ஹெல உருமயவின் தலைவர்களில் ஒருவரும் மேல் மாகாண சபையின் அமைச்சருமான உதய கம்மன்பில 'லங்காதீப' பத்திரிகைக்கு வாராந்தம் எழுதி வரும் தமது பத்தியொன்றில் அண்மையில் கூறியிருந்தார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .