A.P.Mathan / 2012 ஜூலை 14 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் தமிழ் அரசியல் மற்றும் போராட்ட வரலாறுகள் முழுக்க 'துரோகம்' எனும் சொல்லையும் 'துரோகி' என்கிற அடைமொழியினையும் மிகத் தாராளமாக நீங்கள் காண முடியும். .jpg)
அரசியல் ரீதியாக தமிழ் - முஸ்லிம் சமூக உறவினை வளர்த்தெடுக்க வேண்டியதொரு தருணத்தில், சம்பந்தன் என்கிற மூத்த தமிழ்த் தலைவரொருவர் இவ்வாறு தெரிவித்திருப்பது கவலையளிக்கிறது.
'அரசாங்கத்துடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிடுவது – தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகம்' என்று சம்பந்தர் கூறும் கோணத்தில் நின்று பார்த்தால்ளூ அரசாங்கத்தை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் களமிறங்குவது சிங்கள மக்களுக்குச் செய்யும் துரோகமாகப் பார்க்கப்படும். சிலவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மு.கா. இணைந்து போட்டியிட்டால், முஸ்லிம் மக்களில் ஒரு பகுதியினரே ரவூப் ஹக்கீமை துரோகியாகப் பார்க்கவும் கூடும்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பு - கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லையல்லவா? அதற்கு அவர்கள் கூறிய காரணம்தான் என்ன? 'வடக்கு – கிழக்கு ஒரே நிலப்பகுதி. வடக்கையும் கிழக்கையும் தனித்தனியாகப் பிரித்தமையை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில், கிழக்குத் தேர்தலில் நாம் போட்டியிட்டால், வடக்கு – கிழக்கு பிரிப்பை ஏற்றுக் கொண்டதாகி விடும். எனவே – கிழக்குத் தேர்தலை நாம் பகிஷ்கரிக்கின்றோம். மேலும், கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம்' என்று கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூறியிருந்தது.
தமிழ் தேசியக் கூட்டமைப்மையும், மு.காங்கிரஸையும் நாம் ஒரே தராசில் வைத்தே பார்க்கின்றோம். இவை - தமது நலன்களை முன்னிறுத்திச் செயற்படுகின்ற அரசியல் கட்சிகளாகும். இவர்களுக்கிடையில் இடம்பெறும் 'தெருச் சண்டைகள்' குறித்து நாம் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. ஆனால், இவர்களின் 'வம்புகளில்' சமூகங்களை வலிந்து இழுப்பதையும், தமிழ் - முஸ்லிம் மக்களைச் சீண்டி விடுவதையும் நாம் மௌனிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது!hazeer Saturday, 14 July 2012 05:58 PM
சம்பந்தன் அய்யா இந்த கட்டுரையயை கட்டாயம் வாசிக்க வேண்டும் .
Reply : 0 0
mcafareed Sunday, 15 July 2012 12:28 AM
பாவம் வயசான காலம், தூரம் என்ற சொல்லுக்கு பதிலாக சொல்லியிருக்கக்கூடும்,பெரிசாக அலட்டிக்கொள்ளாமல் விடலாம்தான், இருந்தும்,......
Reply : 0 0
Mohammed Hiraz Sunday, 15 July 2012 03:16 AM
அப்பாடா நீண்ட காலத்தின் பின் நல்லதொரு கட்டுரையை எழுதி உள்ளீர்கள். இதகாக உங்களை பாராட்டுகிறோம். இதே போன்ற ஒரு தெளிவை தமிழ் எழுதாளர்களிடம் இருந்தே எதிர்பார்தோம். ஆனால் தாங்கள் முந்தி கொண்டீர்கள். கருத்தை மட்டும் மிக தெளிவாக சிந்திக்க தூண்டுவகையில் அமைத்து எல்லோருமே இதனை ஏற்று கொண்டே ஆக வேண்டும் என்ற பாணியில் எழுதபட்டிருக்கும் இந்த கட்டுரைக்காக நன்றிகள்.
Reply : 0 0
தனியன் Sunday, 15 July 2012 07:57 AM
துரோகிகள்..............
Reply : 0 0
AJ Sunday, 15 July 2012 09:04 AM
இதே துரோக அரசியல் முஸ்லிம் கட்சிகளுக்கும் மிக பொருத்தும் . நிறைய பார்த்தும் இருக்கிறோம் .
ஐயா சம்பந்தன் கூறியது மிக சரியான கருத்தே.
Reply : 0 0
Mohammed Hiraz Sunday, 15 July 2012 09:31 AM
''இந்தக் கட்டுரைக்காக சம்பந்தன், துரோகம், துரோகி என்கிற சொற்களை கூகிள் இணையத்தின் தேடு பொறியில் டைப் செய்து பார்த்தேன்!
'மே தினக் கூட்டத்தில் சிங்கக் கொடியை ஏந்திய சம்பந்தன் ஒரு துரோகி' என்று நூற்றுக் கணக்கான இணையத்தளங்கள் - தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா.சம்பந்தன் மீது துரோகம் என்கிற முத்திரையினைக் குத்தி வைத்திருந்தன!''
இதில் பகிடி என்னவென்றால், 'கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம்' என்று கடந்த முறை தொண்டை கிழியப் பேசிய அதே தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் இம்முறை இடம்பெறும் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் கச்சை கட்டிக் கொண்டு களம் இறங்குகின்றது.
Reply : 0 0
leuk Sunday, 15 July 2012 10:24 AM
துரோகங்கள் பற்றி கட்டுரை எழுதுவதற்கு ஒரு தகுதி வேண்டும். இந்தக்கட்டுரை ரவூப் ஹக்கீமை நியாயப்படுத்துவதற்காகவே எழுதப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் இணைந்து மு.காங்கிரஸ் போட்டியிடுவது எதிர்காலத்தில் எப்பிடியான பின்விளைவுகளைத் தரும் என்பதை அறிவீனமாக சிந்திப்பவர்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். துரோகம் காலம்காலமாக எல்லார் மனதிலும் விதைக்கப்பட்ட விதை. அதன் அர்த்தம் அதன் பாதிப்பு உண்மையில் பாதிக்கபட்ட இனத்தைதான் சாரும். அரசியலை வணிகமாக பார்க்கும் தலைவர்களுக்கோ இனத்துக்கோ சாராது.
Reply : 0 0
AJ Sunday, 15 July 2012 12:45 PM
சம்பந்தன் சிங்க கொடி பிடித்தது, கடந்த முறை தேர்தலில் போட்டி போடாதது இந்த முறை போடுவது என்பதுக்கு காரணம் இருக்கிறது. அது சம்பந்தன் ஐயா மற்றும் ஏனைய தமிழ் சனத்துக்கும் தெரியும். எதோ எழுத வேண்டும் என்று எழுதப்பட்ட கட்டுரையே இது.
Reply : 0 0
Minwar Sunday, 15 July 2012 03:46 PM
AJ அவர்களே....சம்பந்தனின் செய்கைக்கெல்லாம் காரணம் இருக்கியதாச் சொல்றீங்களே, அப்போ ரஊப் ஹக்கீம் கடந்த கிழக்குத் தேர்தலில் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதுக்கும், இந்தத் தேர்தலில் அரசாங்கத்துடன் சேர்ந்து போட்டியிடுவதற்கும் ஒரு காரணம் இல்லாமலா இருக்கும். த.தே.கூட்டமைப்புக்குள்ள இருக்கிற கட்சிகளுக்கு ஆசன ஒதுக்கீடு செய்யும் பிரச்சினையே சம்பந்தருக்கு இன்னும் தீரல. அதுக்குள்ள மு.காங்கிரசை சேர்த்து முதலமைச்சர் கொடுக்கப் போராம் என்பது நல்ல ஜோக்தான். அவங்கவங்க மாங்காய அவங்கவங்க சோத்துல போட்டு பிசையுங்கோ. மத்தவனின் சோத்துத் தட்டில் உங்க மாங்காயை பிசைவது சரியில்லப்பா!
Reply : 0 0
S.p.SHANMUGANATHAN Tuesday, 17 July 2012 04:01 AM
யார் சாணக்கீயண்
Reply : 0 0
Srilankan Thursday, 19 July 2012 11:56 AM
ஐயா , இத்தனை சரியாக கருத்து பதிவு செய்திருந்தும் இன்னும் சில இனவாத ரிதியான கருத்துக்கள் வருகிறதே .... அதுதான் இன்றும் அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்த உதவுகிறது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .