A.P.Mathan / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தின் வடக்குமாவட்டமான "தர்மபுரி" மாவட்டத்தில் நடைபெற்ற "காதல் திருமணம்" தமிழகத்தின் அரசியலை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டம் இயற்கையாகவே பா.ம.க. தலைவர் ராமதாஸுக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கும் இடையே "பனிப்போரை" உச்சகட்டத்திற்கு கொண்டு போகும் மாவட்டம். அப்படியொரு மாவட்டத்தில் உள்ள நாயக்கன்கோட்டை என்ற கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணிற்கும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞனுக்கும் இடையே நடந்த காதல் திருமாணம் பெரும் கலாட்டாவில் முடிந்து விட்டது. மணமகனின் பெற்றோரை அவரது சொந்தங்கள் தொடர்ந்து இம்சைப்படுத்தியதாலும், தன் மகள் திவ்யா தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மணமகனை தேர்வு செய்ததாலும் நொந்துபோன அவரது தந்தை நாகராஜன் மனமுடைந்து திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .