Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 14, சனிக்கிழமை
R.Tharaniya / 2025 ஜூன் 12 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு சிறுவர் தொழிலாளி உருவாகும் போதும் நாட்டின் சாதனையாளர் ஒருவர் இழக்கப்படுகின்றார். நாட்டின் எதிர்காலம் இருண்ட நிலைக்குத் தள்ளப்படுகின்றது.
புத்தகப் பையை சுமக்க வேண்டிய வயதில் குடும்ப வறுமை காரணமாக சிறுவர் தொழிலாளியாக மாறும் சிறுவர்களின் வாழ்வு சுருண்டு போகின்றதுக் குப்பைப் பையில். இதனைத் தடுக்கவே ILO எனப்படும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான உலக தினத்தை ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று கொண்டாட வலியுறுத்துகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட இந்த நாள் உலகெங்கிலும் உள்ள சிறுவர் தொழிலாளர்களின் அவலநிலையை முடிவிற்குக் கொண்டுவரவும், அனைத்து வகையான சிறுவர் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் முயற்சி செய்கின்றது. 2002ஆம் ஆண்டு முதல், ILO எனப்படும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு, சிறுவர் தொழிலாளர்களைப் பயன்படுத்தும் முறையை ஒழிப்பதற்கும், தடை செய்வதற்கும் உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க உலக சமூகத்தை வலியுறுத்தியது.
2025ஆம் ஆண்டிற்குள் சிறுவர் தொழிலாளர்கள் இல்லாத உலகை உருவாக்கும் இலக்கை அடைய, அதிகமான செயல்களைச் செய்து கொண்டிருக்கின்றது.
1919ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெர்சாய்ஸ் உடன்படிக்கை முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.
இந்த உடன்படிக்கை சமூக நீதியின் வழியாக மட்டுமே நிலையான அமைதியை அடைய முடியும் என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்தது. இதன் விளைவாக, 2002ஆம் ஆண்டில், சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாள் அரசு, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு சிறுவர் தொழிலாளர் பிரச்சினையை வலியுறுத்தியுள்ளது.
இப்பிரச்சினையை ஒரு விரிவான மற்றும் ஒருங்கிணைந்த முறையில் தீர்க்கவும், சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிந்து மதிப்பீடு செய்யவும் ஒரு தளத்தை வழங்குவதற்காக நிறுவப்பட்டது இந்நாள். பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு,
“சிறுவர்களின் குழந்தைப் பருவம், திறன், மாண்பு, உடல் மற்றும் மன வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் வேலை” என்று சிறுவர் தொழிலாளர்களின் வேலையை வரையறுக்கிறது. இந்த வரையறையானது, சிறுவர் ஒருவர் ஆரோக்கியமான நபராக வளர உதவும் செயல்பாடுகளைப் புறநிலையாக அடையாளம் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழியாக உள்ளது.
சிறுவர்களை அடிமைப்படுத்தி, அவர்களது குடும்பங்களிலிருந்து அவர்களைப் பிரித்து, கடுமையான ஆபத்துகள் மற்றும் நோய்களைக் நிலை ஏற்படுத்துகின்றது. ILO எனப்படும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு 1999ஆம் ஆண்டில் சிறுவர் தொழிலாளர் மற்றும் மனித வர்த்தகத்தை அகற்றுவதற்கான அதன் முயற்சிகளை விரைவுபடுத்தக் சிறுவர்களை பணியமர்த்தும் போது, அவர்களது வயது கட்டாய பள்ளிப்படிப்பு வயதை விடக் குறைவாக இருக்கக்கூடாது என்று வரையறுத்தது.
அதன்பின் 2015இல் ILOஆல் நிறுவப்பட்ட உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் அதன் பணிக்குக் கூடுதல் வேகத்தை அளித்தன.2025ஆம் ஆண்டிற்குள் அனைத்து வகையான சிறுவர் தொழிலாளர்களையும் ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.
ஆபிரிக்காவில் 7 கோடியே 21 இலட்சம் ஆபிரிக்க சிறுவர்கள், தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர், அவர்களில் 3 கோடியே 15 இலட்சம் பேர் மிகவும் மோசமான சூழ்நிலையில் வேலை செய்கிறார்கள்.
19ஆம் நூற்றாண்டின் முதல் பகுதி முழுவதும், அமெரிக்காவில் விவசாயம் மற்றும் கைவினைத் தொழில்களில் பல சிறுவர்கள் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டனர்.
10 முதல் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பண்ணைத் தொழிலாளர்களாகவும், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும் பணியமர்த்தப்பட்டனர். இந்த சூழலைத் தவிர்க்கவே சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு நாள் கொண்டு வரப்பட்டது.
சிறுவர் தொழிலாளர் விதிமுறைகள் என பொதுவாக அறியப்படும் நியாயமான தொழிலாளர் தரநிலைச் சட்ட விதிகள் 1938ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
சிறுவர் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் முயற்சிகள், அவசர தேவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சிறுவர் தொழிலாளர்களின் ஆபத்துகளைப் பற்றி அறியாத பெரியவர்களுக்குக் கல்வி அளிப்பதையும் முன்னெடுத்து வருகின்றது.
ILO எனப்படும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பில்
187 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வளரும் நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களிடையே அமைதி மற்றும் நேர்மையை உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்காக 1969ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசினை இவ்வமைப்பு பெற்றது.
சிறுவர் தொழிலாளர்களின் ஆபத்துகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, உலகம் முழுவதும் உள்ள பல சிறுவர்களின் வாழ்க்கையை இவ்வமைப்பு மேம்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் தேவைப்படும் சிறுவர்களுக்கு உதவுவதற்காக, உதவித்தொகை, சிறுவர் பராமரிப்பு திட்டங்கள் போன்ற பல முயற்சிகள் இவ்வமைப்பால் நிறுவப்பட்டுள்ளன. இதனால் அதிகமான சிறுவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகியுள்ளது.
துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கு நன்மை அளிக்கும் வகையில், இந்த உலக சிறுவர் தொழிலாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருது பொருளை அடிப்படையாகக் கொண்டு இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. அதே போன்று இந்த ஆண்டு அனைவருக்கும் சமூக நீதி.
சிறுவர் தொழிலாளர் முறையை முடிவிற்குக் கொண்டு வருதல் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகின் ஏழ்மையான நாடுகளில், ஐந்தில் ஒரு சிறார்கள், சிறுவர் தொழிலாளியாக உள்ளனர். வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சி குறைந்த நாடுகளில், நான்கில் ஒரு பகுதி சிறார்கள் (வயது 5 முதல் 17 வரை) அவர்களின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் கேடு விளைவிப்பதாகக் கருதப்படும் உழைப்பில் ஈடுபடுகின்றது.
ஆபிரிக்காவில் சிறுவர் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். (5 முதல் 17 வயது வரையிலான சிறுவர்களில் 26 சதவிகிதம்). இது லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடன் ஒப்பிடும் போது, 7 சதவிகிதம் குழந்தைகள் தீங்கு விளைவிக்கும் வேலையைச் செய்கின்றனர்.
உலகின் எல்லாப் பகுதிகளிலும் பாலின வேறுபாடு இன்றி, 5 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இருப்பினும், பெண்களே ஊதியமில்லாத வீட்டுச் சேவைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
அபாயகரமான தொழிற்சாலை நிலைமைகளில், இழிவான வேலைகளைச் செய்யும் ஏராளமான சிறுவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை நகரங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாகக் குறைவடைகின்றது.
அதே நேரத்தில், நகரங்களில் மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்தும் வேலைகளுக்குக் சிறுவர்கள் தள்ளப்படும் சூழலும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலை மாற சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, சட்டத்தைப் புறக்கணிக்கும் முதலாளிகள் மீது இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அதேநேரத்தில், இந்த வறுமையை ஒழிக்க, நாட்டில் கல்வியை மேம்படுத்த வேண்டும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago