2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நீர் வீழ்ச்சியை பார்க்க...

Kogilavani   / 2015 டிசெம்பர் 28 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வியாழக்கிழமை முதல் நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால் பதுளை மாவட்டத்துக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் வருகையால் பதுளை நகர் நிரம்பி வழிவதாக தெரியவருகிறது. பதுளை நகர் மட்டுமன்றி ஹப்புத்தளை, வெலிமடை, வெல்லவாய ஆகிய நகரிலுள்ள சுற்றுலா விடுதிகளும் நிரம்பியுள்ளன.   சுற்றுலாப் பயணிகள் மஹியங்னை, முதியங்கன போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விஹாரைகள் மற்றும் துன்கிந்தை, பம்பரக்கந்தை போன்ற நீர்வீழ்ச்சிகளை அதிகம் பார்வையிட்டனர்.  (பாலித ஆரியவன்ச)

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X