Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஓகஸ்ட் 10 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டக் கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் காட்டும் அக்கறைக்கும் ஆர்வத்துக்கும் தான் நன்றி கோருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று மாலை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அளவீட்டு அலகுகள் மற்றும் சேவைகள் திருத்தச்சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்,
“அம்பாறை மாவட்டக் கரும்புத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதற்கு கல்லோயா பிளான்டேஷன் கம்பனியினர் இடைஞ்சலாக உள்ளனர்.
அத்துடன், இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் கரும்புச் செய்கையாளர்கள் மாற்று வழியை மேற்கொள்ள வேண்டி நேரிடும்.
இவர்களின் பிரச்சினை தொடர்பில் நாங்கள் பல தடவைகள் அமைச்சர் ரவி கருணாநாயக்காவுடன் பேச்சு நடத்தியுள்ளோம்” எனவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
26 minute ago