2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

‘இனவாதத்தைக் கிளப்ப வேண்டாம்’

Gavitha   / 2016 ஒக்டோபர் 05 , மு.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எழுக தமிழ்' பேரணியின் போது, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்ததாக, சர்ச்சைகள் எழுப்பப்பட்டுவரும் கருத்துக்கள் தொடர்பில் அவர் மறுப்பு வெளியிட்டுள்ளதால், அது பற்றி மீண்டும் கேள்வி எழுப்புவது தவறான விடயமென, சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை சுட்டிக்காட்டிய இந்த விடயத்தை பயன்படுத்தி இனவாதத்தை கிளப்ப முயல வேண்டாம் என்றும் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கம் வலியுறுத்தியது.  

விக்னேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நிலையியற் கட்டளையின் கீழ், நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார்.  

அதற்குப் பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, “வட மாகாண முதலமைச்சர், இந்த விடயம் தொடர்பில் தaனது மறுப்பை வெளியிட்டுள்ளார். அவ்வாறு அவர் மறுப்பை வெளியிட்ட பின்னரும், இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்புவது நியாயமற்றதாகும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .