2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கையில் தினமொன்றுக்கு 800 கருக்கலைப்புச் சம்பவங்கள்

Kogilavani   / 2016 நவம்பர் 25 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நாளொன்றுக்கு, 1100-1200 வரையில் சிசுக்கள் பிறக்கும் அதேவேளையில், 700-800 வரையிலான கருக்கலைப்புச் சம்பவங்களும் இடம்பெறுவதாக, தென் மாகாண சுகாதார திணைக்களத்தின் தொற்றுநோய் பிரிவுக்கான வைத்தியர், நளனி விஜேசேகர தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

“இலங்கையில் கருக்கலைப்புச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாளொன்றுக்கு 1000-1,200 வரையில் சிசுக்கள் பிறந்தாலும் 800 இற்கும் மேற்பட்ட கருகலைப்புச் சம்பவங்கள் இடம்பெறவேச் சென்கின்றன. யார் எதை கூறினாலும்,
கருக்கலைப்பு என்பது ஒரு கொலை இடம்பெறுவதற்கு சமனானது. அதுமட்டுமல்ல, நகரீகமற்றச் செயலும்கூட. இந்த உலகை பரிகசிக்க நினைக்கும் ஓர் உயிரையே நாம் கொலைசெய்கின்றோம்”  என அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .