2025 ஜூன் 09, திங்கட்கிழமை

'எம்முடன் விளையாடும் விளையாட்டை நிறுத்திக்கொள்ளவும்'

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 18 , பி.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமயம், இனத்தை விற்று தங்களுடைய நலன்களை பேணுவதற்கு நாடாளுமன்றிலுள்ள ஒரு சில உறுப்பினர்களுக்கு நான் கூறவிரும்புவது யாதெனில், இந்நாட்டுடனும் எம்முடனும் விளையாடும் விளையாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

உலகில் அதியுயர்ந்த நத்தார் மரத்தை நிர்மாணிக்கும் ஆரம்ப நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

'தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தினால் சமாதானம் மற்றும் சகவாழ்வினை பாதுகாக்கும் தேசத்தை கட்டியெழுப்ப முடிந்துள்ளது. மேலும், தங்கள் நலன்களை பற்றி மாத்திரம் சிந்திக்கின்ற அரசியலை நிறுத்தி சமய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காலம் எழுந்துள்ளது.

ஒரு சில அரசியல்வாதிகள் குறுகிய நோக்கத்துக்காக சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றார்கள். அடுத்த தலைமுறைக்கு இந்நாட்டினை கையளிக்கும் பொழுது இனங்களுக்கிடையேயுள்ள பிரச்சினைகள் தீரக்;கப்பட்டிருக்க வேண்டும். சமய பிரச்சினைகள் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்.

பௌத்த நாடென்ற வகையில் பிற மத தலைவர்கள் பௌத்த மதத்தினை பாதுகாப்பதற்கு தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பினை வழங்குகின்றார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5