2025 மே 17, சனிக்கிழமை

நாடுகடத்தப்பட்ட அறுவர் கைது

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி பல நாடுகளுக்கு செல்ல முயற்சித்த சிரியா பிரஜை உட்பட இலங்கையர்கள் ஐவர் நாடுகடத்தப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் ஐவர் உட்பட வெளிநாட்டு பிரஜையும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால்; நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மந்தாரபுரம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள், பிரான்ஸ், கீறீஸ், இத்தாலி மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கே செல்வதற்கு முயற்சித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் இருவர், பிரான்ஸ நோக்கி பயணிக்க முயற்சித்துள்ளனர்.

மட்டக்களப்பைச்சேர்ந்தவர் கிறிஸ் நோக்கியும் மன்னாரை சேர்ந்தவர் அபுதாபியூடாக இத்தாலி நோக்கி பயணிக்க முயற்சித்துள்ளனர்.

முல்லைத்தீவைச்சேர்ந்தவர்  ஜேர்மனுக்கு பயணிக்க முயற்சித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சிரிய நாட்டுப்பிரஜை   போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு செல்ல முயற்சித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் ஐவரையும் வெளிநாட்டு பிரஜையையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .