Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 11, புதன்கிழமை
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்புப் படை, பொலிஸ் சேவை மற்றும் சிறைச்சாலைத் திணைக்களம் ஆகியவற்றுக்கு, தமிழ் உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்வது எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கப்படும் என்றும் யுத்தம் ஆரம்பமானதை அடுத்தே தமிழர்கள் பாதுகாப்புப் படைகளில் இணைவது பெரிதும் குறைவடைந்ததாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான நேரத்தின் போது, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமம் டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
'யுத்தம் நிறைவடந்ததன் பின்னர் வடக்கில், வேலையில்லாப் பிரச்சினை, பெரும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. பட்டதாரிகள், பாடசாலைக் கல்வியை முடித்து பல்கலைக்கழகம் செல்ல முடியாதவர்கள் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் என, பெரும் எண்ணிக்கையினோர் அங்கு தகுந்த வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர். அந்த வகையில், பாதுகாப்புப் படைகளில் இன விகிதாசாரத்தின் படி, தமிழ் இளைஞர், யுவதிகளை இணைக்கவும் அதேபோல், பொலிஸ் சேவையிலும் உள்ளீர்ப்புகளை மேற்கொள்ளவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?' என, டக்ளஸ் தேவானந்தா இதன்போது கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றிய பிரதமர்,
'இலங்கையின் முதலாவது இராணுவத் தளபதியாக, தமிழர் ஒருவரே இருந்தார். அதேபோல், பொலிஸிலும் தமிழ் உயர் அதிகாரிகள் இருந்திருக்கின்றனர். 1978ஆம் ஆண்டின் பின்னர் தான், இதில் பிரச்சினை ஏற்பட்டது. 1978 ஆம் ஆண்டு தமிழ் அதிகாரிகள் தான் புலிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அதனால், அவ்வாறானவர்கள் கொலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் தான் தமிழ்ப் பிரதேசங்களில் இருந்து பாதுகாப்பு சேவையில் இணைவது தவிர்க்கப்பட்டது.
டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் புலிகளுக்கு எதிராக போராடிய போதிலும் அவர்கள் பாதுகாப்புப் படைகளில் இணைந்திருக்கவில்லை.
எவ்வாறிருப்பினும், தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு படைகளுக்கும் பொலிஸ் சேவைக்கும் இணைத்துக் கொள்வது தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம், தமிழ் பேசும் 216 உத்தியோகத்தர்கள், பொலிஸ் கான்ஸ்டபிளாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்' என்று தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
6 hours ago
7 hours ago