2025 ஜூன் 09, திங்கட்கிழமை

50 பேருக்கு FCID அழைப்பு

George   / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி முறைக்கேடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய அதிகாரிகள் 50 பேர், பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று வியாழக்கிழமை அழைத்துவரப்பட்டுள்ளனர்.

கடந்த அராசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்காக வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக குறித்த அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளர்.

ஜனாதிபதி செயலகம், சுற்றுலா துறை, சுற்றுலாதுறை அமைச்சு, பொறியியலாளர் அலுவலகம், ஊழியர் சேமலாப நிதியம், மின்சார சபை, கால்பந்து சம்மேளனம், மகநெகும மற்றும் சீ.எஸ்.என் தொலைக்காட்சி ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளே வாக்குமூலமளிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .