2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தப்பிச் செல்ல அதிகாரிகள் திட்டம்

J.A. George   / 2025 ஜூன் 09 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை சுங்க சோதனை இல்லாமல் விடுவித்ததற்கு பொறுப்பான அதிகாரிகள் குழு நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகாரிகள் பெல்ஜியம் மற்றும் ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பயணத் தடையைப் பெற குற்றப் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று காலை ஆஜரானபோது  உதய கம்மன்பில இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .