Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரர் ஹரன் ஆகியோரை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் எஸ்.சின்னையா, இன்று செவ்வாய்க்கிழமை(01) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களில் ஒருவரின் சகோதரியொருவர் காத்தான்குடி பொலிஸாருக்கு வாக்கு மூலமொன்றை அளித்திருந்தார்.
குறித்த வாக்கு மூலத்தையடுத்து விசாரனைகளை மேற் கொண்டிருந்த காத்தான்குடி பொலிஸார் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த இருவரும் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டபோதே இருவரையும் விளக்கமறியலில் விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏற்கெனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக குற்றப்புலனாய்வு துறையினரால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025