2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மீளாத்துயில் கொண்டார் 'அம்மா'

George   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

- இலட்சக்கணக்கான மக்களின் கதறலும் புரட்சி தலைவியின் சகாப்தம் நிறைவுக்கு வருகின்றது.

-வங்கக் கடலோரம் தமிழக திரை உலகின், அரசியல் அரங்கத்தின் மாபெரும் சகாப்தம் மீளாதுயில் கொள்கிறது

-ஜெயாவின் உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழை, சவக்குழிக்குள் இறக்கப்படுகின்றது.

-ஜெயாவின் உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழை மூடப்படுகின்றது.

-ஜெ.வின் பூத உடலில் இருந்து தேசியக் கொடி உரிய மரியாதையுடன் அகற்றப்பட்டது

-ஜெ. அண்ணன் மகன் தீபக்குடன் இறுதி சடங்குகளை இணைந்து செய்தார் சசிகலா

-ஜெ. உடலுக்கு இறுதி சடங்குகளை செய்தார் ஜெ. அண்ணன் மகன் தீபக், குலாம்நபி ஆசாத், சசிகலா கணவர் இறுதி மரியாதை செலுத்தினர்

-காங். துணைத் தலைவர் ராகுல் இறுதி மரியாதை செலுத்தினார்

-தமிழக அரசு தலைமை செயலர் ராமமோகன்ராவ், முன்னாள் ஆளுநர் ரோசய்யா இறுதி மரியாதை

-ஜெயலலிதா உடலுக்கு முன்னாள் ஆளுநர் ரோசய்யா மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி

-மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன். ராதாகிருஷ்ணன் முதல்வர் பன்னீர்செல்வம், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை,அமைச்சர் எடப்பாடி பன்னீர்செல்வம் ஜெயாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்கள்.

- மக்களின் அழுகை சத்தம் காற்றில் கலந்து வருகின்றது.

- அரசியல்வாதிகள், மூத்த தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.

-சுற்றியுள்ள மக்கள் கதறியழுகின்றனர்.

-சந்தனப்பேழையில் வைக்கப்பட்ட ஜெயாவின் உடலுக்கு ஆளுநர் இறுதி மரியாதை செலுத்துகின்றார்.

- முப்படையினர் மரியாதை வேட்டுக்களை தீர்த்து, ​ஜெயாவின் உடலுக்கு மரியாதை செலுத்துகின்றனர்.

-சந்தனப்பேழையில் “புரட்சித் தலைவி ஜெயலலிதா“ என பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது

-ஜெயாவின் பூதவுடலுக்கு முப்படை தளபதிகள் மரியாதை செலுத்துகின்றனர்.

-இராணுவ கவச வாகனத்தில் இருந்து ஜெயாவின் பூதவுடல் இறக்கப்படுகிறது

-ஜெயாவின் பூதவுடல், இறுதி சடங்குக்காக சந்தனபேழைக்கு மாற்றப்படுகின்றது.

-ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம், எம்.ஜி.ஆர் நினைவிடத்தை அடைந்தது.

-ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம், மெரினா கடற்கரை சாலையை அடைகின்றது

- எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்திலேயே மீளா துயில் கொள்ளச் செல்கிறார் ஜெயா.

-ஜெ. உடல் செல்லும் இராணுவ வாகனத்தில் புதிய முதல்வர் பன்னீர் செல்வத்துடன் உபி முதல்வர் அகிலேஷ் யாதவும் செல்கிறார்

-தமிழகத்தின் 'இரும்புப் பெண்மணி' ஜெ.வின் உடல் இன்னும் சிறிது நேரத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

-அண்ணாசாலை வழியாக ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் செல்கிறது

-அண்ணா சாலை, அண்ணா சிலை, வாலாஜா சாலை வழியாக எம்.ஜி.ஆர் நினைவிடம் செல்கிறது ஜெயாவின் இறுதி ஊர்வலம்

-வீடுகளின் மாடிகள் மற்றும் மரங்களில் ஏறி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

-ஜெயலலிதாவின் உடலுக்கு மலர்தூவி மக்கள் இறுதி அஞ்சலி

-வீதிகளின் இருபக்கமும் இலட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.

-இலட்சக்கணக்கான தொண்டர்களுடன் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் ஆரம்பமாகியது

-ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் தொடங்கின

-கண்ணாடிப் பேழையில் வைத்து ஜெயலலிதாவின் உடல் மூடப்பட்டது

-ஜெயலலிதா உடல் அடங்கிய சவப்பெட்டியை ராணுவ அதிகாரிகள் மூடினர்

-ஜெயலலிதா மிகச்சிறந்த அரசியல் தலைவர் - ராகுல்காந்தி

-மிகச்சிறந்த பெண் அரசியல் தலைவரை நாடு இழந்து தவிக்கிறது: ராகுல்காந்தி

-இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்

-ராகுல் காந்தி ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்

-குலாம் நபி ஆசாத், திருநாவுக்கசரும் அஞ்சலி செலுத்தினர்

-இன்னும் சிறிது நேரத்தில் ஜெயலலிதா இறுதி ஊர்வலம் தொடங்கவுள்ளது

-ராஜாஜி அரங்கிலிருந்து அலங்கரிக்கப்பட்ட பீரங்கி வண்டியில் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது

-அண்ணா சாலை, வாலாஜா சாலை, காமராஜர் சாலை வழியாக எம்.ஜி.ஆர். சமாதியை ஊர்வலம் அடைகிறது -எம்.ஜி.ஆர் சமாதி வளாகத்தில் உடல் அடக்கம் நடைபெறும்

-இறுதி ஊர்வலத்தையொட்டி இலட்சக்கணக்கில் தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சமாதியில் குவிந்துள்ளனர்

-இறுதி ஊர்வலத்திற்குப் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு -ஹெலிகொப்டர்கள் மூலமாகவும் இறுதி ஊர்வலம் கண்காணிக்கப்படவுள்ளது

-இன்னும் சிறிது நேரத்தில் மெரீனா எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெ. உடல் நல்லடக்கம்

-ஜெ. உடலுக்கு கேரளா ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன் இறுதி அஞ்சலி

-ஜெ. உடலுக்கு மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் அஞ்சலி

-ஜெ. உடலுக்கு கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டியும் அஞ்சலி

-கேரள ஆளுநர் சதாசிவம் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

-கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியும் அஞ்சலி செலுத்தினர்

-ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் சென்னை வந்தடைந்தார்

-தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்

-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்

-மனைவியுடன் வந்து அஞ்சலி செலுத்தினார் வைகோ

-மதிமுக பொதுச்செயலர் வைகோ துணைவியாருடன் அஞ்சலி செலுத்தினார்

-தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் அஞ்சலி செலுத்தினார்

-ராஜ்ய சபா எம்பி டி. ராஜா, சி. மகேந்திரன் ஜெயலலிதாவிற்கு நேரில் அஞ்சலி

-இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு: டி. ராஜா

-குணம் அடைந்துவிட்டார் என்ற நிலையில் மரணச் செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது: டி. ராஜா

-சிபிஐ சார்பில் ஜெயலலிதாவுக்கு எங்களது வணக்கம்: டி. ராஜா

-நடிகர் சிம்பு அஞ்சலி செலுத்தினார்

-கூட்டநெரிசல் தள்ளுமுள்ளுவில் சிக்கினார் நடிகை சரோஜா தேவி

நடிகை சரோஜாதேவி முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்


சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள  செல்வி. ஜெயலலிதாவின் பூதவுடலுக்கு இலட்சக்கணக்கான மக்ள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அது தொடர்பான நேரடி காட்சிகளே இவை.

நன்றி - FOX TAMIL TV


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .