Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனர்வாழ்வு பெற்ற, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமையை உறுதி செய்ய முடியாதுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான சாட்சிகளைத் தேடுவதற்கு, இதுவரை முடியாமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷ ஊசி ஏற்றப்பட்டதால், 100 பேருக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை 5 பேரைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே, சுமந்திரன் எம்.பி, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில், தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், 'விஷ ஊசி ஏற்றப்பட்டதால், முன்னாள் போராளிகளில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்ததாகத் தகவல்கள் இருந்தன. அது தொடர்பில் நாம் தேடிப்பார்த்தோம். ஆனால், அதனை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதற்காக, விஷ ஊசி ஏற்றப்பட்ட விவகாரம் பொய்யானது என்று என்னால் கூறமுடியாது' என்று குறிப்பிட்டுள்ளார்.
'ஊசி ஏற்றினார்களா, இல்லையா என்பது குறித்து எனக்கு எப்படித் தெரியும். விஷ ஊசி ஏற்றப்பட்டமைக்கான சாட்சியங்களை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதை மட்டுமே என்னால் கூறமுடியும்' என்று கூறியுள்ள சுமந்திரன் எம்.பி, மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் வடக்கிலிருந்த புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமைக்கும், கண்டனத்தைத் தெரிவித்தார்.
36 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
55 minute ago
1 hours ago
2 hours ago