2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

1,44,000 பேர் வெளிநாட்டு பயணம்

Janu   / 2025 ஜூலை 16 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான  6 மாதங்களில் 1,44,000 (1 இலட்சத்தி 44 ஆயிரம்) பேர் தொழிலுக்காக வெளிநாடு பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

88,684 ஆண்கள்  55,695 பெண்கள், ஆகக்கூடுதலான 38, 806 பேர் குவைத் நாட்டுக்கே சென்றுள்ளனர்.துபாய் நாட்டுக்கு 28,973 பேர், 21,958 பேர் கட்டார், சென்றுள்ளனர்

அதேவேளை ஜப்பான் 6073 பேர்,  தென்கொரியாவுக்கு 3134 பேர்,  கடந்த 6 மாத காலங்களில் இலங்கையர்  வெளிநாட்டுக்குச் சென்று 3.73 பில்லியன் டொலர்களை அந்நியச் செலாவணியை உழைத்து அனுப்பியுள்ளனர் இதன் படி 2025 ஆம் ஆண்டு இறுதியில் 7 பில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்ற வருவாயை இலங்கை பெற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அஷ்ரப் ஏ சமத்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .