2025 ஜூன் 16, திங்கட்கிழமை

11 அதிகாரிகள் நீதிமன்றில் இன்று ஆஜர்

Editorial   / 2020 ஜூலை 08 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 11 அதிகாரிகள் இன்று(08) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட பொதுமகன் ஒருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர்கள் நீதிமன்ற அனுமதியுடன் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பில் இருந்த சந்தேகத்தின் பேரில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராகம பகுதியில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .