2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

13ஆம் திகதிவரை விண்ணப்பங்கள் ஏற்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 04 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 13 ஆம் திகதி முன்னதாக சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 11ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகருக்கு தபாலில் அனுப்பிவைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2018ஆம் இடம்பெற்ற உள்ளூராட்சி சபை தேர்தலின் போது காணப்பட்ட வாக்களர் இடாப்பின் அடிப்படையில் இந்த தேர்தல் நடத்தப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கினால், கடந்த வருடம் பெப்ரவரி மாதம் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் நடைபெறவில்லை.

இந்த தேர்தலை உடனடியாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் கடந்தவாரம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .